தரிசனம்

இறையியலை வேதத்தை மையப்படுத்தி போதிப்பதன் மூலம் தேவனை மகிமைப்படுத்துவதும் அவ்வாறு கற்று கொடுப்பதன் மூலம் விசுவாசிகளை தேவ பணியிலும், சமுதாயத்திலும், பணியிடத்திலும், ஊழியத்திற்கும், தலைமைத்துவத்திற்கும் உருவாக்குவது நம் தரிசனம் ஆகும். மேலும்,

பெருகிவரும் விசுவாசிகளை சத்தியத்தில் வளர்க்கும் மாபெரும் தேவையை சந்திப்பதற்காக அநேக விசுவாசிகளை ஊழியத்திற்கு பயிற்சி கொடுத்து உருவாக்குவது.

விசுவாசிகளுக்குள் மறைந்து கிடக்கும் தாலந்துகளை, திறமைகளை கண்டுபிடிக்க உதவி ஊழியத்திற்கு சிறந்த தலைவர்களாக உருவாக்குவது.

விசுவாசிகள் ஒவ்வொருவருமே ஊழியம் செய்ய வேண்டும் என்ற பாரத்தை கொடுத்து தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவது.

பணிபுரிவோருக்கும், விசுவாசிகளுக்கும் இறையியல் படிப்பை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே குறைந்த செலவிலேயே கிடைக்க செய்து சரீரமாகிய சபையை, சபை பாகுபாடில்லாமல் ஆரோக்கியமாக தேசமெங்கிலும் வளரச் செய்வது.